இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து.! கல்லூரி மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது வான் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் வேலம்பாளையம் செட்டியார் வீதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் மணிகண்டன்(19), அன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான விஜய், சஞ்சய் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அன்னூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவிநாசி அருகே கருவலூர் நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler van accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->