வெளி வந்த பாண்டியர்கள் கால வரலாற்று கற்கள் !! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அவிரியூரில் உள்ள சிவன் கோயில் அருகே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் ‘சதி கல் மற்றும் அவரது கணவரின் நடுகல் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் டி.ரமேஷ் தலைமையிலான ஆய்வு குழுவினர், தமிழக தொல்லியல் துறை ஆய்வு அறிஞர்கள் ஆர்.மோகன்ராஜ், தனித்தமிழன் நேரு ஆகியோர் அடங்கிய குழுவினர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டனர். செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கொண்ட தூண் போன்ற ஒரு கல்லைக் கண்டுபிடித்தனர்.

கல்வெட்டைப் ஆய்வு செய்ததில், ஒற்றைக் கல் ஒரு வீரனுக்கு நடுகல் என்றும் அவன் மனைவிக்கு சதிகல் என்றும் கண்டுபிடித்து உள்ளனர். கி.பி.1311ல் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆட்சியின் போது, ​​முஸ்லீம் போரில், ஆதா தெள்ள ரகுதர் என்ற படைவீரன் உயிரிழந்ததாகவும், அவரது மனைவி மல்லண்ணா தேவி, சதி எனப்படும், தீக்குளித்து இறந்ததாகவும், அந்த கல்லில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் பாண்டிய வம்சத்தின் வாரிசுகளுக்கு இடையே நடந்த போரில் சுந்தர்ராஜன் பாண்டியனுக்கு ஆதரவாக மன்னர் அலாவுதீன் கல்ஜியின் முக்கிய தளபதி மாலிக் கபூர் தமிழகம் வந்தார். இந்தப் போரில் ரகுதர் கொல்லப்பட்டார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாமாத்தூர் சிவன் கோயிலில் உள்ள பல கல்வெட்டுகள் முஸ்லீம் போரைக் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் மாலிக் கபூரின் படையெடுப்புக்கான சான்றுகளாக உள்ளன.

அந்த கல் தூணில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு உச்சியில் சூரியனும் சந்திரனும் செதுக்கப்பட்டுள்ள நிலையில், இடது புறத்தில் ராகுதர் வலது கையில் வாளுடன் நிற்பதாகவும், இடது கை தரையை நோக்கியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில், அவரது மனைவி வலது கையை தரையை நோக்கியும், இடது கை வானத்தை நோக்கியும் நிற்கும் காட்சி. அவர்களுக்கு இடையே ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unearthed historical stones of Pandia period


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->