3 நாளாக தொடர்ந்து 4000 கனஅடி நீடித்து வரும் ஒகேனக்கல் நீர் வரத்து....!
water inflow from Hogenakkal continuing at 4000 cubic feet for 3 days
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மாறிமாறி குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் 4000 கன அடியாக வந்த நீர்வரத்து தொடர்ந்து 3-வது நாளாக இன்று தண்ணீர் அதே அளவு நீடித்து வந்தது.
அதுமட்டுமின்றி சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும், தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
water inflow from Hogenakkal continuing at 4000 cubic feet for 3 days