ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவை.. மூதாட்டியை கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூரை சேர்ந்தவர் பட்டத்தாள் (75). இவர் கடந்த ஆறாம் தேதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவரது நகைகள் மாயமாகி இருந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற மாணவன் மூதாட்டியின் நகைகளை அடமானம் வைத்த போது அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்ததாக கூறினார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து, கொலை வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested due to Murder a old lady


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->