14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.! போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் காங்கு. இவரது மகன் கார்த்திக் (27). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடந்த 23ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கார்த்திகை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for raping 14 year old girl in Perambalur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->