குமரி || பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவி - நொடிப்பொழுதில் நடந்த பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதி பேருந்து நிறுத்தத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால், மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில், கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தோழியை பார்த்துவிட்டு, பேருந்துக்காக நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். 

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இறங்கி மாணவியிடம் பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவியை கன்னத்தில் ஓங்கி அறைந்து கீழே தள்ளி தாக்கினார். 

இதனால், அந்த மாணவி வலித் தாங்கமுடியாமல் அலறிய சத்தம் கேட்டு அங்கி இருந்த சிலர் ஓடி வந்து வாலிபரை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் மாணவியை தொடர்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இதையடுத்து காயமடைந்த கல்லூரி மாணவி அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கம்பளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth attack college student in kanniyakumari


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->