காதலிக்க மறுப்பு.. இளைஞர் செய்த செயல்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள ட்ராவல்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த பெண்ணுடன் கல்லூரியில் படித்து ஸ்ரீராம் என்ற இளைஞர் இப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்தப்பெண் வேலை பார்க்கும் டிராவல்ஸ்க்கு சென்ற ஸ்ரீராம், காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth stabbed a young woman who refused to love him in kovai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->