வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி! டெல்டா மக்களே உஷார்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வடமேற்கே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, இன்று தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை விடும் வாய்ப்பு உள்ளது.

மேலும், ஏப்ரல் 9 முதல் 13 ஆம் தேதி வரையிலான நாட்களில், தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை தொடரலாம் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, சில இடங்களில் மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu weather Report Chennai IMD


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->