அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்...! - சென்னை வானிலை ஆய்வு மையம்
The heat will be scorching for the next 3 days Chennai Meteorological Department
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் இருப்பதாவது, " வளிமண்டல கிழடுக்குச் சுழற்சி காரணமாக வருகிற 11-ம் தேதி தென்காசி, தூத்துக்குடி,நெல்லை, குமரி, விருதுநகர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதைத் தொடர்ந்து 12 மற்றும் 13-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 14ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்று, நாளை,நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.ஒரு சில இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதில் சென்னைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதிய வேளையில் 36° செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
The heat will be scorching for the next 3 days Chennai Meteorological Department