அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்...! - சென்னை வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் இருப்பதாவது, " வளிமண்டல கிழடுக்குச் சுழற்சி காரணமாக வருகிற 11-ம் தேதி தென்காசி, தூத்துக்குடி,நெல்லை, குமரி, விருதுநகர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதைத் தொடர்ந்து 12 மற்றும் 13-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 14ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்று, நாளை,நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.ஒரு சில இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதில் சென்னைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதிய வேளையில் 36° செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The heat will be scorching for the next 3 days Chennai Meteorological Department


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->