3பேர் பலி!!! இந்தோனேஷியாவில் மழையால் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பலபேர் மாயம்....!
3 dead Many missing due to landslides and floods due to rain in Indonesia
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் கடும் மழைப் பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் அங்குள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. மேலும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் 24 நகரங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுகபூமி மாவட்டத்தில் பெய்த கனமழையில் வீடுகள் சேதம் அடைந்து பள்ளிகள் இடிந்து கிடக்கின்றன.

இதில் குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலியாகினர். மேலும் இதில் பலரைக் காணவில்லை என அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரியில் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த பலத்த மழைக்கு 25 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தோனேசியா காவல்துறையினர் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்வு இந்தோனேசியா மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
3 dead Many missing due to landslides and floods due to rain in Indonesia