4 மாத குழந்தையை கொன்ற வழக்கு.. உ.பி. பெண்ணுக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றம்!
Case of killing 4-month-old baby UP woman executed in Abu Dhabi
4 மாத குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (வயது 39) என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் (வயது 39) என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.4 மாத குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு அபுதாபியில் உள்ள அல் வத்பா சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 39 வயதான ஷாஜாதி கான் என்ற பெண். இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பூர்வமாக விசா பெற்று அபுதாபி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு அவரை வேலைக்கு அழைத்த உரிமையாளருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.அப்போது இந்த பெண் இந்த குழந்தை பராபரிக்கும் பணியை செய்து வந்தள்ளார். மேலும் இந்த குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசிகள் போட்டு வந்துள்ள நிலையில் டிசம்பர் 7-ந்தேதி திடீரென உயிரிழந்துள்ளது.
இதையடுத்து ஷாஜாஹிதான் அந்த குழந்தையை கொலை செய்யதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் குழந்தையை கொன்றதாக ஷாஜாஹின் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனு கடந்த 2023-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆணடும் பிப்ரவரி மாதம் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி ஷாஜாதியிடம் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது தனக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சகத்திடம் தனது மகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அப்போது இந்த மனு விசாரணையின்போது, மத்திய வெளியுறவுத்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் "கடந்த 15-ந்தேதி ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 28-ந்தேதி இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.அதனை தொடர்ந்து மார்ச் 5-ந்தேதி அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
English Summary
Case of killing 4-month-old baby UP woman executed in Abu Dhabi