பயங்கரவாதம் அனைத்து வடிவங்களிலும் அழிக்கபடும் - பாகிஸ்தான் பிரதமர் உறுதி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் சமீப காலமாக குண்டு வெடிப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்புகளிடமிருந்து கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் கைபர் -பக்துங்வா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், அதை அரசு மிக விரைவில் நசுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் அழித்து அமைதியை நிலைநாட்டும் என்று உறுதியளித்துள்ளார். இதையடுத்து நாட்டின் பாதுகாப்பு நிலையை ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டம் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan pm assures that terrorism will be eradicated in all forms


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->