குலுங்கிய நகரம்! அடுத்தடுத்து நடந்த சம்பவம்! ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம்! - Seithipunal
Seithipunal


தாய்வானில் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தாய்வானின் கிழக்கு நகர பகுதியான ஹிவாலியனில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தாய்வானில் ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்  பூமியிலிருந்து 9.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கம்  அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள்  இது தொடர்பாக மக்களு க்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது  வாடிக்கை ஆகிவிட்டது. மக்கள் எச்சரிக்கை உடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Richter scale earthquake hits Taiwan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->