பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.!
sunitha williams return earth
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்களில் பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர். இதையடுத்து அமெரிக்காவின் புதிய அரசு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர முயற்சி செய்தது.

அதன் படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் இருந்தனர்.
அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு வந்துள்ளனர். இது குறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில், "வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த டிராகன் விண்கலம், புளோரிட கடற்பரப்பை நோக்கி நெருங்கியது. தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு வந்துள்ளனர்.
சுமார் பதினேழு மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.
English Summary
sunitha williams return earth