பெரும் சோகம்! திடீரென வெடித்த கார் டயர்! சம்பவ இடத்திலே 5 பேர் பலி! - Seithipunal
Seithipunal


புனே அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தெலுங்கானாவை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேடக் அருகே உள்ள நாராயணகேட் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சுற்றுலா செல்ல முடிவெடுத்து காரில் மும்பைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

புனே அருகே உள்ள இத்தாப்பூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. கார் டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விழுந்துள்ளது.

இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவரையும் உயிரிழந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people from Telangana died in a tire car accident


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->