பெங்களூர் : கல்லூரி மாணவர் குத்தி கொலை .!
Bangalore college students murder case
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே வசித்து வந்தவர் அர்பாஷ் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-வது ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் கல்லூரியில் இருந்த அர்பாசை சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். உடனே அவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார்.
வெளியே வந்த அர்பாசை மர்மநபர்கள் கல்லூரி அருகே வைத்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்
இந்தத் தகவலை அறிந்த கே.ஜி.ஹள்ளி போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அந்த விசாரணையில் நேற்று முன்தினம் அந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடந்ததாகவும் , அந்த சந்தர்ப்பத்தில் அர்பாஷ் மற்றும் சில மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்த தகராறு காரணமாக அர்பாஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தகம் எழுந்து உள்ளது. மேலும், கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
English Summary
Bangalore college students murder case