மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால்.. விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!
Husband suicide in chikkamakaluru Karnataka
கர்நாடகா மாநிலத்தில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சங்கர்புரா பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் ஹரீஷ் (32). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து மீண்டும் இவர்களுடைய கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்ட நிலையில், கணவரிடம் கோபித்துக் கொண்டு அவரது மனைவி பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து ஹரிஷ் மாமனார் வீட்டிற்கு சென்று தன்னுடன் வரும்படி மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து காணப்பட்ட ஹரிஷ் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது ஹரிஷ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை எடுத்து போலீசார் அரிசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide in chikkamakaluru Karnataka