அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சல்.. 8 பேர் பலி.!!
japanese encephalitis in asaam
அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளை காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்கால வெள்ளப்பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் நீடிக்கிறது.
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளை காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனையின் நடத்தினர். இதில் நிலைமையை சமாளிக்க வருகின்ற 16ஆம் தேதிக்குள் மாவட்ட பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
English Summary
japanese encephalitis in asaam