அசாம் : சிறுமியை கட்டிவைத்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது.!
man arrasted for sexuall harassment case in assam
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் மாவட்டம் பெபேஜியா கிராமத்தில் கடந்த 3-ந்தேதி பதினான்கு வயது சிறுமி ஒருவர் காணவில்லை என்று சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அபோது, அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுய நினைவு இல்லாமல் கிடந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியின் தாயார், பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் கடத்தல் புகார் கொடுத்துள்ளார்.
அதன் படி, போலீசார் பைஜான் அலியை பிடித்து விசாரணை செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் பின்வருமாறு:- "பைஜானின் கூட்டாளிகள் இரண்டு பேர் அவருக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர், பைஜான் சிறுமியை கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, அவருடைய கை, கால்களை கட்டி போட்டு இரண்டு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, பைஜான் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய கூட்டாளிகளையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
man arrasted for sexuall harassment case in assam