வெளுத்து வாங்கிய மழை - படகு கவிழ்ந்து 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே படகு சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஏழு பேரை ஏற்றி சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படகில் இருந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died drowned water in maharastra


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->