கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி..  உடலை 2 துண்டுகளாக வெட்டிய அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


குடிபோதையில் இருந்த கணவரை கொலை செய்து உடலை 2 துண்டுகளாக வெட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது வீட்டிலிருந்து வெகுதூரம் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

"கர்நாடகா மாநிலம் பெலகாவியின் சிகோடி தாலுக்கா உமாராணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்தா இட்னாலி. இவரது வயது 40. இவருடைய மனைவி பெயர்  சாவித்திரி. ஸ்ரீமந்தா இட்னாலி குடிபழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி தனது மனைவியிடம் சண்டை போடுவதே வழக்கமாக கொண்டுள்ளார்.எது   ஸ்ரீமந்தாவுக்கும் அவரது மனைவிக்கும் வெகு நாட்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

சம்பவதன்று கடந்த மாதம் 8ம் தேதி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது  ஆத்திரமடைந்த சாவித்திரி மதுபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் போட்டுள்ளார். மனைவியால் இரக்கமற்று கொலை செய்யப்பட்ட ஸ்ரீமந்தாவின் சடலத்தை போலீசார் கடந்த மாதம் 10ம் தேதி கண்டெடுத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் போலீசாருக்கு ஸ்ரீமந்தாவின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகம் ஏற்படாதவாறு சுற்றிதிரித்த  மனைவி மீது போலீசார் பார்வைபட்டது .இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க பல்வேறு நாடகங்களைளையும் நடத்தியுள்ளார் ,இதனை தொடர்ந்து சாவித்திரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்".அப்போது விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் குடிபோதையில் இருந்த கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற பின்னர் அவரது முகத்தை ஒரு கல்லால் அடித்தும், உடலை 2 துண்டுகளாக வெட்டி தனது வீட்டிலிருந்து வெகுதூரம் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife kills husband  Body cut into 2 pieces


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->