மினரல் வாட்டர் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகளா? வாங்க பார்க்கலாம்.!
mineral water drinking dangerous
* தண்ணீரில் இருக்கும் தாது பொருட்களை ஆர்ஓ செய்யாமல் நாம் குடித்தால் மருந்து மாத்திரை என்ற தூசுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஆர்ஓ செய்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் வரும். அனைத்து தாது பொருட்களையும் எடுத்துவிட்டு சத்து இல்லாத குடிநீரை பருகினால் நோய்கள் ஏற்படும்.
* இயற்கையான சத்துக்கள் இல்லாத தண்ணீரை யாரும் பயன்படுத்தக் கூடாது. ஆர்ஓ செய்வதற்கு பதிலாக குடிநீரை மண்பானையில் ஊற்றி இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் தண்ணீரில் உள்ள கெட்ட பொருட்களை மண்பானை உறிஞ்சிக் கொள்ளும்.
* வெள்ளை நிற பருத்தி துணியாள் தண்ணீரை வடிகட்டி பின்னர் பயன்படுத்தலாம். வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தி துணி தண்ணீரில் உள்ள நோயை உண்டாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களை உறிஞ்சி கொள்ளும். எந்த ஒரு சத்துக்களும் இல்லாத ஆர்ஓ தண்ணீரை குடிப்பதால் உடல்நிலை மந்தமாகும்.
![](https://img.seithipunal.com/media/drinking water-nbuda.jpg)
* ரத்த செல்கள் செயலிழக்க வாய்ப்பு உள்ளது. தண்ணீரை ஆர்ஓ செய்வதன் மூலம் கெட்ட பொருட்கள் அழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அதில் உள்ள இயற்கை சத்துகளும் அழிக்கப்படுகிறது. தண்ணீரை ஆர்ஓ செய்து பயன்படுத்துவதற்கு பதிலாக அதனை செம்பு பாத்திரத்தில் ஊற்றி இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பதால் தண்ணீரில் உள்ள கெட்ட பொருட்கள் அழிந்து விடும்.
* அதில் உள்ள அதிகப்படியான சத்துக்கள் உடலில் வந்து சேரும். எனவே தண்ணீரை ஆர்ஓ செய்யாமல் செம்பு, தாமிர உலோகத்தினால் ஆன பாத்திரங்களை பயன்படுத்தலாம். ஆர்ஓ செய்த தண்ணீரை பருகும் பொழுது நாக்கில் உள்ள சுவை தன்மை குறைய தொடங்கும்.
* பற்களின் ஈறுகள் வலு இழக்கும். ஆர்ஓ தண்ணீர் குடிப்பதன் மூலம் தோல் சுருங்க வாய்ப்புள்ளது. இதனால் சுத்தமான தண்ணீர் வேண்டும் என்றால் பருத்தி துணியாள் தண்ணீரை வடிகட்டியோ அல்லது செம்பு, மண்சட்டி போன்றவற்றில் தண்ணீரை ஊற்றி பயன்படுத்துவது நல்லது.
English Summary
mineral water drinking dangerous