#BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கில் திடீர் திருப்பம்! ஓபிஎஸ் தரப்பால் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
admk ops eps case aug 25
அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. மேலும் வழக்கு விசாரணைக்கு ஓபிஎஸ் தரப்பு அவசகாசம் கேட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 25 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.