அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!
admk pv rajendran dead
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினர் P.V. ராஜேந்திரன் மறைவுக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
"நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழு உறுப்பினர் அன்புச் சகோதாரர் P.V. ராஜேந்திரன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
ராஜேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்".
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.