இந்த முறை பா.ஜ.க செயல்பாடு சிறப்பானதாக இருக்கும்: அமித் ஷா திட்டவட்டம்.! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க கூட்டணி 400 என்ற இலக்கை நிர்ணயித்து மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகிறது. முதற்கட்ட வாக்கு பதிவு 102 தொகுதிகளில் இன்று நடைபெற உள்ளது. 

தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய கூட்டணியை சேர்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜ.க 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என தெரிவித்து வருகின்றனர். 

தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி 15 இடங்களுக்கு குறைவாக தான் பா.ஜ.க வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த முறை தென்மாநிலங்களில் எங்களுடைய செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என அமீத் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர், 

கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என இயங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும். 

பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்துள்ளது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 

நாட்டின் பாதுகாப்பையும் வளத்தையும் உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah says BJP performance better this time


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->