அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 11 பேரை சுத்துப்போட்ட அசாம் மாநில காவல்துறை.! - Seithipunal
Seithipunal


பங்களாதேஷில் இயங்கும் அன்சருல்லா அணி மற்றும் அல்கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 11 நபர்களை, அசாம் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், காவல்துறையினரின் விசாரணையின் போது அசாம் மாநிலத்தின் பார்பெட்டா, குவகாத்தி, கோல்பாரா மற்றும் மொரிகான் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடன்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந் பிஸ்வா சர்மா, "மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறையினரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் பயங்கரவாத அமைப்புகள் முறியடிக்கப்பட்டுள்ளது". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam State Police ARREST Al Qaeda Group


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->