சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று முதல் ஓபிஎஸ் தீவிர தேர்தல் பிரச்சாரம்.!
Erode by election OPS start election Champaign from today
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில் ஈபிஎஸ் தரப்பினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதில், ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பாஜகவின் நிலைப்பாட்டிற்காக காத்திருந்த நிலையில் தங்கள் அணியின் வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று முதல் ஓபிஎஸ் தனது வேட்பாளர் செந்தில்முருகனை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
English Summary
Erode by election OPS start election Champaign from today