#BREAKING | தேர்வில் ஆள்மாறாட்டம் - திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் ஆல்மாராட்டம் செய்த விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கடாரம் கொண்டான் பகுதியில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் நேற்று தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று இரண்டாம் ஆண்டுக்கான பொலிட்டிக்கல் சயின்ஸ் தேர்வுகள் நடந்துள்ளது.

இந்த தேர்வில் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொருவர் (ஆள்மாறாட்டம்) தேர்வு எழுத வந்து இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகர் என்பது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாஜக பிரமுகர் ரமேஷ் சொன்னதால் இந்த தேர்வை எழுதியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று இருவரையும் கைது செய்த போலீசார் நிலையில், தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exam Forgery BJP Baskar arrest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->