வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்து  அவர்களுக்கு காணிக்கை செலுத்துவோம் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கல்வியும், வேலைவாய்ப்பும் எட்டாக்கனியாக இருந்த பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக  மருத்துவர் அய்யா அவர்கள் விடுத்த அறைகூவலை  ஏற்று, உலகமே உற்றுப்பார்த்த  தொடர்சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும்,  தாக்குதலுக்கும் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று  37-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த தியாகம் ஈடு இணையற்றது. அதற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும்  வணங்குகிறேன்... போற்றுகிறேன்.

எண்ணற்ற போராட்டங்களை நடத்தியும், ஏராளமான உயிர்களை பலிகொடுத்தும் வன்னிய மக்களுக்கு இன்னும் முழுமையான சமூகநீதி கிடைக்கவில்லை. 

மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகநீதிப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்; கடந்த காலங்களை விட  தீவிரமாக சமூகநீதிக் குரலை எழுப்புவோம். 

வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான  இடப்பங்கீட்டை வென்றெடுத்து சமூகநீதிக்காக உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களுக்கு காணிக்கையாக செலுத்துவோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Vanniyar Reservation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->