தெலங்கானா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஓவைஸி கட்சி எம்எல்ஏ மகனுக்கு ஜாமீன்.!
TELUNGANA owaisi party mla son bail
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மகன் உள்ளிட்ட 4 சிறுவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த மே 28-ஆம் தேதி ஹைதராபாத்தில் பகல்நேர கேளிக்கை விருந்தில் கலந்துகொண்ட 17 வயது சிறுமியை, 3 சிறாா்கள் உள்ளிட்ட 6 போ் சேர்ந்து காரில் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.
இந்த வழக்கில் 6 பேரைக் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர். இந்த ஆறு பேரில், 5 பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. காரணம் கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏவின் மகன். ஆவார்.
இந்நிலையில், அந்த 5 சிறுவர்களில் ஒருவரை தவிர்த்து, எம்எல்ஏ மகன் உள்பட 4 பேருக்கு சிறார் நீதி வாரியம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நான்கு குற்றவாளிகளும் விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமை மாவட்ட நன்னடத்தை அலுவலரிடம் ஆஜராக வேண்டும் என்றும், சிறார் நீதி வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
TELUNGANA owaisi party mla son bail