அரசு மருத்துவர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள அறந்தாங்கியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் (வயது39), மாதவி. ரமேஷ் புதுக்கோட்டை பேருந்து நிலையதிற்கு பின்புறம் மொபைல் கடை வைத்துள்ளார். அவரது மனைவி மாதவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  

இந்நிலையில், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாப்பாட்டிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது,  வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுபற்றி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 Sawaran jewels stolen from government doctor's house..!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->