கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு.!
A fisherman who went fishing in the sea died
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்த மீனவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் குமார். இவர் திருவெற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருண் காந்தி மற்றும் சுப்பிரமணி(40) ஆகியோருடன் சேர்ந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் தனக்கு சொந்தமான பைபர் படகின் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார்.
பின்னர் மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மீனவர் சுப்பிரமணி கடலில் தவறி விழுந்து உள்ளார். இதையடுத்து அவர் கடலில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் இருந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவெற்றியூர் காவல் துறையினர் சுப்பிரமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A fisherman who went fishing in the sea died