பள்ளத்தில் கவிழ்த்து தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - மணப்பாறை அருகே பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


மணப்பாறை அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, நள்ளிரவில் மணப்பாறை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி தீயணைப்புத் துறையினருடன் வந்த போலீசார் தீயை அனைத்து விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் சென்ற பயணிகள் சாதுரியமாக செயல்பட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amni bus fire accident in manaparai trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->