#அரியலூர் || 86 வயது குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.! அந்த கொடூர காரணம் என்ன?!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 86). கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

சிறுமி இது குறித்து தன் தாயிடம் தெரிவித்துள்ளார். அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இப்புகாரின் பேரில் காவல்துறையினர், குப்புசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இன்று, இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் குற்றவாளி குப்புசாமி க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalor oldman Life imprisonment until death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->