சேலம் அருகே பரிதாபம்.! கல்லூரி மாணவி தற்கொலை.! தாய் திட்டியதால் விபரீதம்.!
College girl commits suicide in salem
சேலம் மாவட்டத்தில் தங்க மோதிரம் தொலைத்ததை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி வி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாரதி (21) கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாரதியின் பிறந்த நாள் என்பதால் பெற்றோர் தங்க மோதிரம் பரிசாக கொடுத்துள்ளனர்.
ஆனால் பாரதி அந்த மோதிரத்தை தொலைத்துள்ளார். இதனை பாரதியைப் பெற்றோரிடம் கூறியதால், பாரதியின் தாய் அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பாரதி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு வேலையை முடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு வந்தபோது திடீரென பாரதி வாந்தி எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் தற்கொலை செய்து கொள்வதற்காக விசு மாத்திரை தின்றதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியுடன் இந்த பெற்றோர் உடனடியாக பாரதியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனில் சி பாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College girl commits suicide in salem