தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்.! பணத்தை இழந்த கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.!
College student commits suicide for online gambling in madurai
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகன் வினோத்குமார்(21) மதுரை திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த வினோத் குமார், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் பெருமளவு பணத்தை இழந்ததால், மேலும் கடன் வாங்கியும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கடன் பிரச்சனை அதிகமானதால் வினோத் குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று விடுதியில் வினோத்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சமூகம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College student commits suicide for online gambling in madurai