கரூர் :: கல்லூரி மாணவர் திடீர் தற்கொலை.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லூரி மாணவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகன் யுவன்சங்கர்(18) தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்த யுவன்சங்கர், திடீரென அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தோகைமலை போலீசார், உயிரிழந்த யுவன்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து யுவன்ஷங்கரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், திடீரென கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student commits suicide in karur


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->