மேற்கூரை இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி - ஈரோட்டில் சோகம்.!!
college student died for roof collapse in erode
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அடுத்த பெரியபுலியூர் அருகே கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி மகன் பிரதீப். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் பிரதீப் தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student died for roof collapse in erode