இஸ்லாமியர்களுக்கு ஜி.கே.வாசன் ரம்ஜான் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் உண்ணா நோன்பு இருந்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கி இறைவனை வழிபடும் புனித மாதமாகும். நன்னாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரின் வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன். 

ரமலான் நோன்பின் மகத்துவம், ஏழை, எளிய மக்களின் துன்பத்தையும், பசியையும் உணர்ந்து அவர்களுக்கு உணவையும், பொருளையும் அளித்து உதவுவது இறைவனுக்கு அளிப்பதற்கு ஒப்பாகும். 

அதனால் ஈகைத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துதல் இல்லாதவர்களுக்கு அளித்து உதவும் மனம் அனைவரையும் சகோதர சகோதரிகளாக பாவிக்கும் குணம் இவை இஸ்லாமியர்களின் தனிசிறப்பு. 

உள்ளத் தூய்மையோடு நோன்பிருந்து இறை வழிபாடு நடத்தும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரமலான் தின நல்வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GK VASAN Ramzan wishes


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->