வரதட்சணை கேட்டு கொடுமை: 9 மாத கர்ப்பிணி தற்கொலை.! கணவர் கைது - Seithipunal
Seithipunal


சென்னையில் 9 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் கிரண் குமார் (25). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலை (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9 மாத கர்ப்பிணியாக இருந்த மணிமேகலை, திடீரென அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் மணிமேகலையின் தாயார், வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்றும், கணவர் கிரண் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனதால் இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ அதிகாரி விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த விசாரணையில் 9 மாத கர்ப்பிணியான மணிமேகலையை வரதட்சணை கேட்டு கணவர் கிரான்குமார் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கிரண் குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested in 9 month pregnant wife suicide case in chennai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->