கோபித்துக் கொண்டு சென்ற மனைவி.! கணவர் எடுத்த விபரீதம் முடிவு.!
Husband commits suicide in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே கழுவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி தமிழ்ச்செல்வன் (30). இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து மீண்டும் இவர்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவி சாந்தி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வன் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband commits suicide in tirunelveli