கோவையில் பரபரப்பு - மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டிட தொழிலாளி கைது.!!
man arrested for harassment in coimbatore
கோவையில் மூதாட்டி ஒருவருக்கு கட்டிட தொழிலாளி பாலியட்டால் தொல்லை அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் அருகே உள்ள கிராமத்தில் 85 வயதுள்ள மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு, கட்டிட தொழிலாளியான நாச்சிமுத்து என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த நாச்சிமுத்து அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். பின்னர் பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி சூலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாச்சிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment in coimbatore