#பண்ருட்டி | கஞ்சா போதையில் அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுனரை சரமாரியாக வெட்டிய இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி அருகே அரசு பேருந்து ஓட்டுனரை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த குடுமியான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன். அரசு பேருந்து ஓட்டுனர் ஆன இவர் சம்பவம் நடந்த அன்று பண்ருட்டி அருகே இலுப்பையூர் கிராமத்திற்கு அரசு பேருந்தை ஓட்டுச் சென்றுள்ளார்.

அப்போது பேருந்து வழிமறித்த இரண்டு இளைஞர்கள், ஓட்டுநர் முருகனை சரமாரியாக தாக்கி, அவரை கத்தியால் தலையில் வெட்டி வெட்டிவிட்டு தப்பு சென்றுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த ஓட்டுனர் முருகனை அடுத்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முருகன் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களும் மருத்துவமனையில் குவிய தொடங்கினர்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இலுப்பையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல், சற்று தள்ளி நிறுத்தியதால் ஒரு பெண் ஓடிவந்து ஏறியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த தேவா மற்றும் ஆதி ஆகிய இரண்டு இளைஞர்கள், கஞ்சா போதையில் ஓட்டுநர் முருகனை வெட்டியதாக தெரிய வருகிறது.

சம்மந்தப்பட்ட இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pandruti Govt bus Driver Attempt Murder


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->