தமிழகத்தின் முக்கிய மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அமல்படுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதார்கள் மணிமண்டபத்தில், நாளை விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. 

மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் சார்பாக வரும் 27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள மருது சகோதார்கள் நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுகிறது.

இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை, மருது சகோதர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 9 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் கருதி இந்த விதிமுறைகளை பின்பற்றி, அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் தலைவர்களின் சிலைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் நேற்று மாவட்ட டச்சியார் கோரிக்கை வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Sivagangai District 144 law


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->