காவலாளியை வேட்டையாடிய வனக்காவலர்! பரபரப்பு கிளப்பிய உறவினர்கள்! நடந்தது என்ன?
Theni Guard killed in forest guard
கம்பம் வனப்பகுதியில் வன காவலர் துப்பாக்கியால் சுட்டதில் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தேனி, கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி-சுருளி ஆறு மின் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள காட்டுப்பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது.
குள்ளப்பகவுண்டன்பட்டி சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு காவல் காப்பதற்காக சென்றிருந்தார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வன காவலர் திருமுருகன், வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அவர் கையில் இருந்த அறிவாளால் திருமுருகனை வெட்ட முயன்றுள்ளார்.
இதனால் திருமுருகன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஈஸ்வரனின் வலது புறம் வயிற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இது குறித்து திருமுருகன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் உயிரிழந்த ஈஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஈஸ்வரனின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு வர வேண்டும் என மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களிடம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Theni Guard killed in forest guard