ஆன்மீக விடுதலை: தாய், இரு குழந்தைகள் உட்பட 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை! மூடநம்பிக்கையால் நிகழ்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


திருவண்ணமலை: ஆன்மீக விடுதலை அடைவதற்காக ஒரு தாய், அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மற்றொரு ஆணும் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ருக்மணி (45), அவரின் குழந்தைகளான ஜலந்தாரி (17) மற்றும் முகுந்த் ஆகாஷ் குமார் (12) விவாகரத்தான பிறகு தனியாக வசித்து வந்தனர். 

ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய இவர்களுடன், ஸ்ரீ மஹாகாலா வியாசர் (40) எனும் ஆணும் இணைந்து ஆன்மீக பயணங்களில் ஈடுபட்டிருந்தார்.  

இவர்கள் அண்மையில் கார்த்திகை தீபத் திருநாளையடுத்து திருவண்ணாமலை வந்துவிட்டு சென்னைக்கு திரும்பி, மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்றனர். 

கடந்த வெள்ளிக்கிழமை, கிரிவலப் பாதையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள், ஆன்மீக விடுதலை அடைவதற்காக விஷம் அருந்தி தற்கொலை செய்தனர்.  

விடுதியின் ஊழியர்கள் தங்களது அறையின் கதவை திறக்க முடியாததைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கும் தற்கொலை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

அவர்கள் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதமும், விடியோ பதிவு செய்ததும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai 4 people suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->