அதிர்ச்சி - சென்னையில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது.!
three peoples arrested for drugs kidnape in chennai
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல் ஆணையர் அருண் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார். இந்தப் போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நுங்கம்பாக்கம் போலீஸாருடன் ஒருங்கிணைந்து நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததையடுத்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதித்ததில், மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருளை வைத்திருந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் வியாபாரிகள் என்பது தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்கள் மற்றும் அதை உடலில் செலுத்துவதற்காக வைத்திருந்த 26 சிரிஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples arrested for drugs kidnape in chennai