#தமிழகம் | மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச்லைட்., கொடூர கணவனின் செயலால் பலி!
viruthunagar murder case
விருதுநகர் அருகே உறவின் போது மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச் லைட் செலுத்திய கணவனால், ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்த்தவர் சேர்ந்த தம்பதி வனராஜ்- ஏசுராணி. இந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு முதல் திருமணத்தின்போது பிறந்த இரண்டு மகள்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று காலை ஏசுராணி உடலில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து வனராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலீசார் ஏசுராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில். ஏசுராணியின் கணவர் வனராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதனையடுத்து, அவரிடம் கிடுக்குப்புடி விசாரணை மேற்கொண்ட போலீசாரின் சிறப்பு விசாரணையில், வனராஜ் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
அதன்படி, தம்பதிகள் இருவரும் மது அருந்திவிட்டு உறவு கொண்டுள்ளனர். அப்போது உறவில் மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச் லைட் வைத்து அழுத்தியதால், ரத்தம் வெளியேறி ஏசுராணி உயிரிழந்து உள்ளார்.
இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார், வனராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.