இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
Earthquake in Indonesia Dec 08
இந்தோனேசியாவின் அபேபுரா பகுதியில் இன்று(வியாழக்கிழமை) 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கநாமது பூமிக்கு அடியில் 37.4 கிலோமீட்டர் (23.24 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் அல்லது உயிர் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நேற்று முன்தினம் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் தெற்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் கடந்த மாதம் 21ஆம் தேதி மேற்கு ஜாவாவில் சியாஞ்ச்சூர் நகரில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 374 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Indonesia Dec 08