பிரேசில் நாட்டு முன்னால் அதிபர் உடலுக்கு என்ன ஆச்சு? தற்போதைய நிலை என்ன? - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெய்ர் போல்சனாரோ அவர்கள்.இவர் வடகிழக்கு பிரேசிலில்  நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்தநேரம் அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது அரசியல் கட்சி தகவல் தெரிவித்தது.

இதில் வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவிலுள்ள ஒரு சிறிய நகரமான சாண்டா குரூசிலுள்ள மருத்துவமனையில் ஜெய்ர் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு இந்த வலி கடந்த 2018 செப்டம்பரில் வயிற்றில் ஏற்பட்ட கத்திக்குத்தின் நீண்டகால விளைவுகளுடன் தொடர்புடையது என அவரது லிபரல் கட்சி தகவல் தெரிவித்தது.

மேலும் மருத்துவமனையில் போல்சனாரோவை கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தற்போது தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

health issues for ex former president Brazil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->